எளியவர் நிழலில் மனம் மகிழும் இறைவன் written by ஆன்மீக எமுத்தாளர் வக்கீல் Hemalatha by Sekar Reporter · February 4, 2020 👫🙏எளியவர் நிழலில் மனம் மகிழும் இறைவன் !! 🙏👫 🏯🔔தஞ்சைப் பெருவுடையார் கோவில் அல்லது தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோயில் என அழைக்கப்படும் தஞ்சைப் பெரியகோவில் , தமிழரின் பாரம்பரியச் சின்னமாக மதிக்கப்படுகிறது !! கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் மண்ணின் பெருமையைப் பறைசாற்றியபடி உயர்ந்து நின்று கொண்டுள்ளது !! 🏯🔔கிபி 10 ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு புகழ்பெற்ற நிலையிலிருந்தபோது இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது இந்த ஆலயம் !! ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் , பின்நாட்களில் தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது !! கிபி பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீஸ்வரம் என்று சொல்லப்பட்டது !! 🏯🔔இந்தப் பிரம்மாண்டமான கோவிலை கட்டி முடிக்க சுமார் ஏழு ஆண்டுகள் ஆனதாக சொல்லப்படுகிறது !! இரண்டு அல்லது மூன்று தளங்கள் மட்டும் உள்ள கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில் , கற்களே கிடைக்காத , காவிரி சமவெளிப் பகுதியில் 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயில் அமைக்கப்பட்டது பெரும் சாதனையாகும் !! அதுமட்டுமல்லாமல் கல்வெட்டுகள் , சிற்பங்கள் , ஓவியங்கள் , வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல்வேறு புதிய அம்சங்களையும் கோவிலில் அமைத்து பல புதுமைகள் செய்யப்பட்டது !! 🏯🔔இந்தக் கோவிலைப் பற்றி , உணர்வுப்பூர்வமான பல்வேறு வகையான உண்மை சார்ந்த கதைகள் உலவி வருகின்றன !! அவற்றில் ஒன்றை இங்கே காணலாம் !! 🏯🔔பெரிய கோவிலை நிர்மாணிக்க ராஜராஜன் முடிவு செய்து அதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டது !! பல்வேறு ஸ்தபதிகள் தலைமையில் , நூற்றுக்கணக்கானச் சிற்பிகள் உள்ளிட்ட பணியாளர்கள் கோவில் கட்டும் பணியில் உழைத்துக் கொண்டிருந்தார்கள் !! அது தவிர பொது மக்களும் அவர்கள் பங்கிற்கு பொன்னும் பொருளும் கோவில் திருப்பணிக்கு கொடுத்து உதவினார்கள் !! 🏯🔔சரித்திரப் புகழ் பெறும் வகையில் கட்டப்பட வேண்டும் என்ற லட்சிய நோக்கில் , அதனைக் கட்டமைக்க துல்லியமாகத் திட்டமிடப்பட்டுப் பணிகள் நடந்து வந்தன !! 🏯🔔அந்த ஊரில் துணைக்கு யாரும் இல்லாத “அழகி” என்ற பெயர் கொண்ட பாட்டி ஒருத்தியும் இருந்தாள் ! அவருக்கும் கோவில் பணியில் பங்கு கொள்ள ஆவல் !! சிவாலயத் திருப்பணிக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்று மிகவும் விரும்பினார் !! 🏯🔔பொருள் ஏதும் அவரிடம் இல்லாததால் , என்ன செய்யலாம் என்று தீவிரமாக சிந்தனை செய்தவரின் மனதில் , ஒரு யோசனை உதித்தது !! கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சிவ கைங்கரியமாக நீர்மோர் கொடுக்க முடிவு செய்தாள் !! ஆலயம் கட்டும் பணியில் இருப்பவர்களின் தாகம் தீர்ப்பதும் , ஒருவகையான சிவத்தொண்டு என முடிவு செய்து , பானையில் மோர் எடுத்துக்கொண்டு , கோவில் பணியில் இருக்கும் சிற்பிகளுக்கு தினமும் கொடுத்து வந்தாள் !! 🏯🔔வெயில் சமயத்தில் , கருவேப்பிலை , இஞ்சி கலந்த நீர் மோர் பருகும் சிற்பிகள் மகிழ்ச்சி அடைந்தனர் !! தினமும் அவனது வருகையை எதிர் நோக்கி இருக்கும்படி , அவளது உதவி அமைந்துவிட்டது !! அவளும் அவர்கள் மத்தியில் பழக்கமான ஒரு நபராக ஆகிவிட்டாள் !! 🏯🔔காலப்போக்கில் கோவில் கட்டும் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் , கோபுர விதானத்தில் , கருவறைக்கு மேல் கல் பதிக்க வேண்டிய பணி மீதமிருந்தது !! சரியான ஒரு கல்லைத் தேடி பல நாட்கள் அழைந்தார் தலைமைச் சிற்பி !! நல்ல நீரோட்டமுள்ள , ஒற்றைக் கல்லாக இருக்க வேண்டும் என்ற நிலையில் தேடும் பணிகள் வேகமாக நடந்தன !! 🏯🔔ஒருநாள் வழக்கப்படி மோர் கொடுக்க வந்த பாட்டியின் முகத்தில் உள்ள கவலையைக் கவனித்த தலைமைச் சிற்பி , அதுபற்றி அவரிடம் விசாரித்தார் !! கோவில் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் , அவளால் எதுவும் தர இயலாத நிலையை எண்ணி , வருத்தம் அடைவதாகப் பாட்டி கூறினார் !! 🏯🔔சிற்பியும் அவளைத் தேற்றுவது போல பேசியது கேட்டு , பாட்டி ஒரு வேண்டுகோளை அவருக்கு வைத்தாள் !! அதாவது அவளது வீட்டுக்கு முன்பாக கிடக்கும் ஒரு பெரிய பாறையை பயன்படுத்திக் கொள்ள , தலைமைச் சிற்பியைக் கேட்டுக் கொண்டாள் !! 🏯🔔வயதில் பெரியவர் என்ற கருத்தில் , சிற்பி அழகிப் பாட்டி வீட்டுக்குச் சென்று அந்தப் பாறையை பார்த்தார் !! கோபுர விதானத்தின் மீது அமைக்கப் பொருத்தமான கல் போன்றே அவருக்குத் தோன்றியது !! சோதனை செய்ததில் , அந்தப் பாறை பொருத்தமானது என்று அறிந்து , கச்சிதமாக அதைச் செதுக்கி , கோபுர விதானத்தில் அமைத்துவிட்டார் !! பாட்டி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை !! 🏯🔔குடமுழுக்கு நாள் நெருங்கிய நிலையில் , ராஜராஜன் தனது பரிவாரங்களுடன் வந்து கோவிலை சுற்றிப் பார்த்தார் !! இத்தனைச் சிறப்பு அம்சங்களுடன் சிவபெருமானுக்கு கோவில்கள் இருக்க வாய்ப்பு இல்லை என்ற பெருமையில் பூரிப்படைந்தார் !! 🏯🔔அன்று இரவு உறக்கத்தில் இருந்த ராஜராஜன் கனவில் , சிவபெருமான் தோன்றி , ” பெரிய கோவிலில் , அழகி என்கின்ற மூதாட்டி தயவில் அமைந்த நிழலில் தங்குவது , எனக்கு மிக்க மகிழ்ச்சி ” என்று கூறினார் !! 🏯🔔துயிலில் இருந்து திடுக்கிட்டு விழித்த மன்னன் , ” பிரம்மாண்டமான பெரியகோவிலைக் கட்டிய என்னிடம் , அழகி என்கிற பாட்டியின் நிழலில் தங்குவது இறைவனுக்கு மகிழ்ச்சி என்று சொல்லியதன் பின்னணி என்ன ? என்கிற குழப்பத்தில் தவித்தான் !! 🏯🔔மறு நாள் , அமைச்சரை அனுப்பி , அழகி என்ற பாட்டி பற்றி விசாரித்து வரச் சொன்னான் !! அமைச்சரும் விசாரித்துத் தகவல் தந்ததும் , அவளைத் தேடி குடிசைக்கே இராஜராஜன் சென்றார் !! 🏯🔔” அம்மா , சிவபெருமானுக்கு நீங்கள் எப்படிப்பட்ட தொண்டு செய்தீர்கள் என்பதை நான் அறியேன் !! ஆனால் நீங்கள் தந்த நிழலில் மகிழ்ச்சியாக இருப்பதாக இறைவன் என் கனவில் தெரிவித்தார் !! நீங்கள் என்ன செய்தீர்கள் என அறியலாமா ” என்று கேட்டார் !! 🏯🔔தினமும் கோவில் திருப்பணி புரியும் சிற்பிகளுக்கு , நீர் மோர் கொடுத்து வந்ததையும் , கோபுர விதானத்தில் பதிக்க , கல் ஒன்றை கொடுத்ததையும் கூறினாள் !! ராஜராஜசோழன் அந்த பாட்டியை விடவும் மகிழ்ச்சி அடைந்தார் !! இறைவன் எளியவர்களுக்கெல்லாம் எளியவன் என்பதையும் , அன்பால் மட்டுமே அவனைக் கட்டுப்படுத்த முடியும் என்பதையும் உணர்ந்து அந்தப் பாட்டியை வணங்கினார் !! 🏯🔔இந்தச் சம்பவம் தஞ்சை பெரிய கோவில் கட்டுமானப் பணிகளின் போது , நடந்த நிகழ்வாகச் சொல்லப்படுகிறது !! இன்று தஞ்சை நகராட்சி அலுவலகம் உள்ளப் பகுதியில் , அழகிப் பாட்டி வசித்த குடிசை அமைந்து இருந்ததாக சொல்லப்படுகிறது !! ” அழகிக் குளம் ” என்கிற ஒரு இடமும் தஞ்சாவூரில் இருப்பது குறிப்பிடத்தக்கது !! 🏯🔔ஆச்சரியப்படத்தக்க , பிரம்மாண்டமான வரலாற்று அடையாளங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் , மேற்கண்ட நிகழ்வு போன்ற உணர்வு ரீதியான , தியாக வரலாறு ஏதாவது ஒன்று வெளியில் தெரியாமல் இருக்கிறது !! 🏯🙏🔔👫⛲🦍🐘⛲👫🔔🙏🏯
For Petitioners : Mr.V.Raghavachari, Senior Counsel for Mr.R.VeeramaniFor Respondents : Mr.A.Selvendran,Special Government Pleader(for R1 to R4); Mr.D.Sreenivasan (for R5).O R D E R(Order of the Court was delivered by S.M.Subramaniam J.) March 23, 2024 by Sekar Reporter · Published March 23, 2024
https://x.com/sekarreporter1/status/1729748332308812069?t=I6mHyUVTtVdJCiH3csW5pg&s=08 The Learned Senior Counsel R. singaravelan appearing for the petitioner relied on Seshammal’s case, wherein it is held “that if any rule is framed by the Government which purports to interfere with the rituals and ceremonies of the temples the same will be liable to be challenged by those who are interested in the temple worship”. In the present case since the respondents are trying to interfere with the Agama under the guise of training, hence the petitioner submitted the same is against the interest of the temple worship. After hearing the submissions on the either side this Court is of the considered opinion that the issue need elaborate hearing, only then it can be considered whether the petitioner’s rights are affected. Hence this Court proceeds to deal with the issues raised by the petitioner. November 29, 2023 by Sekar Reporter · Published November 29, 2023
R.SINGGARAVELAN,SENIOR ADVOCATE Section 27(f) of the Tamil Nadu Government servants (Conditions of Service) Act, 2016 – Interpretation in Shobana case by the Apex Court – Vs- Civil Judges Recruitment 2023 in the State of Tamil Nadu BY R.SINGGARAVELAN,SENIOR ADVOCATE March 22, 2024 by Sekar Reporter · Published March 22, 2024