வழக்குகள் அதிகம் தேக்கம்: தலைமை நீதிபதி பாப்டே கவலை

logo

Advertisement

தற்போதைய செய்தி
PrevNext
வழக்குகள் அதிகம் தேக்கம்: தலைமை நீதிபதி பாப்டே கவலை
மாற்றம் செய்த நாள்: செப் 13,2020 01:02
4
Share
Tamil News
புதுடில்லி : ”கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நீதிமன்றங்களில் வழக்குகள் அதிக அளவில் தேங்கியுள்ளன. எனவே, வழக்குகளுக்கு சமரச தீர்வு காணும் முயற்சிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்,” என, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே பேசினார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி ஓய்வு பெற்ற, ஆர்.பானுமதி எழுதிய, ‘நீதித்துறை, நீதிபதிகள் மற்றும் நீதி நிர்வாகம்’ என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா, டில்லியில் நேற்று நடந்தது. இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே பேசியதாவது:

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணமாக முக்கியமான வழக்குகள் மட்டுமே விசாரிக்கப்படுகின்றன. இதனால், நாடு முழுதும் உள்ள நீதிமன்றங்களில் அளவுக்கு அதிகமான வழக்குகள் தேங்கி விட்டன.

கொரோனா பிரச்னை முடிந்ததும், இந்த வழக்குகளுக்கு எல்லாம் வழக்கமான நடைமுறைப்படி தீர்வு காண முடியுமா என தெரியவில்லை. எனவே, சமரச தீர்வு வாயிலாக இந்த வழக்குகளுக்கு தீர்வு காண முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

You may also like...