ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூடப்பட்டிருக்கும் திருநங்கைகளுக்கான சிறப்பு பிரிவை திறந்து சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் மூடப்பட்டிருக்கும் திருநங்கைகளுக்கான சிறப்பு பிரிவை திறந்து சிகிச்சை அளிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

திருநங்கைகளுக்கு பிரத்யோகமாக சிகிச்சை அளிக்கும் வகையில் சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவு இயங்கி வந்தது. இப்பிரிவு நீண்ட காலமாக இயக்கவில்லை என்றும் மீண்டும் திறந்து திருநங்கைகளுக்கு சிகிச்சை வழங்க கோரியும் சிவகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானார்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது வழக்கு தொடர்பாக ராஜூவ்காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வரிடம் விவரங்களை பெற்று 4 வாரங்களில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.

You may also like...