K chandru former judge write in facebook உச்சநீதிமன்றம் இம்மக்களது வழக்கை எடுக்க மறுத்துவிட்டது!**** ஃ_____________________________________
உச்சநீதிமன்றம் இம்மக்களது வழக்கை எடுக்க மறுத்துவிட்டது!****
ஃ_____________________________________
இருப்புப்பாதைகளில் தூங்குவோர்,
நெடுஞ்சாலைகளில் நடைபோடுவோர்,
பிரச்சினைகளை இங்கே கூறாதீர்!!
என்று கூறி நெஞ்சில் வேல் பாய்ச்சியுள்ளது!!
நீதிமன்றம் நலிவுற்ற மக்களுக்காக இல்லையா?
சட்டத்தின் முன் அனைவரும் என்று 14 வது பிரிவில்
அரசமைப்புச் சட்டத்தில் சொல்லியுள்ளார்களே!?
அப்படிக் கூட எம் வழக்குகளை விசாரிக்க மாட்டீர்களா?
சட்டம் எல்லோரையும் சமமாகவே பாவிக்கும்
என்பதைக்கிண்டலடித்து நோபல் பரிசு பெற்ற
அனடோல் பிரான்ஸ்(Anantole France) என்ற
கவிஞர் கூறினார்:-
“The Law in its Majestic equality,
Forbids rich & poor alike
To sleep under bridges,
To beg in the streets,and
To steal their bread.”. .
எவ்வளவு பொருத்தம் உங்கள் நீதிமுறைக்கு**
தன்னிறைவோடு சென்று வாருங்கள் என்று அந்த பலகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது!!!