Judge ananth venkadesh orderஏற்காட்டில் அமையவிருந்த மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்தின் கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஏற்காட்டில் அமையவிருந்த மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்தின் கட்டுமான பணிகளை நிறுத்த உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கூட்டுறவு சங்கங்களில் உள்ள இளநிலை உதவியாளர் முதல் உதவி பதிவாளர் பணியிடங்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாநில அளவிலான கூட்டுறவு பயிற்சி நிலையத்தை சேலம் மாவட்டம் ஏற்காடு வட்டத்தில் உள்ள செம்மடுவு கிராமத்தில் 4.33 ஏக்கரில் அமைக்க 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கூட்டுறவுத்துறை அரசாணை பிறப்பித்தது.

முதலில் 15 கோடியே 84 லட்சம் ரூபாயில் பயிற்சி மையத்தை அமைக்க திட்டமிடப்பட்டு, பை பின்னர் சில ஆய்வுகளிக்கு பிறகு 61 கோடியே 80 லட்சம் ரூபாயில் அமைப்பது என திட்டமிடப்பட்டது. மாநில தலைமை கூட்டுறவு வங்கி, அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பங்களிப்பில் பயிற்சி மையம் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின்போது, திண்டுக்கல் மாவட்ட கொடைக்கானல் வட்டத்தில் உள்ள மன்னவனூர் கிராமத்தில் தேசிய அளவிலான கூட்டுறவு மேலாண்மை படிப்பு மற்றும் பயிற்சி நிறுவனத்தை அமைப்பது என அறிவிக்கப்படது

இந்நிலையில், ஏற்காட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி கூட்டுறவுத் துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்து கொடைக்கானலில் தேசிய அளவிலான பயிற்சி மையத்திற்கு பதிலாக, ஏற்காடில் திட்டமிடப்பட்ட மாநில அளவிலான மையத்தின் பணிகளை தொடர அரசுக்கு உத்தரவிடக்கோரி ஏற்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு ((லேம்ப் – LAMP)) கூட்டுறவு சங்கத்தின் தலைவரான ஜி. சென்றாயன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஏற்காட்டில் பயிற்சி மையம் அமைக்காததால், மனுதார எவ்வாறு பாதிக்கப்பட்டார் என்பது குறித்த தகவல்களுடன் கூடுதல் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்.

You may also like...