Ab granted to police ac by judge jaya chandren

சென்னை திருமங்கலத்தில் தொழிலதிபரை கடத்திய தொடர்பான வழக்கில் உதவி ஆணையருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை திருமங்கலத்தில் தொழிலதிபரை கடத்தி, சொத்துகளை எழுதி வாங்கிய வழக்கில் சிக்கிய காவல்துறை அதிகாரிகள் 6 பேரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை அயப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜேஷ். இவரை பண்ணை வீட்டில் கட்டிப்போட்டு அவருடைய சொத்துகளை திருமங்கலம் காவல் நிலைய அதிகாரிகள் எதிர் தரப்பினருக்காக எழுதி வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். பின்னர், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து டிஜிபி உத்தரவிட்டார்.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வந்தது. இதன் தொடர்ச்சியாக தொழிலதிபர் ராஜேஷை கடத்தி, சொத்தை எழுதி வாங்கிய புகாரில் திருமங்கலம் காவல் உதவி ஆணையர் சிவகுமார், காவல் ஆய்வாளர் சரவணன், உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உட்பட திருமங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த காவலர்கள் 10 பேர் மீது சிபிசிஐடி காவல்துறை அண்மையில் வழக்கு பதிவு செய்தனர்.

காவல் உதவி ஆணையர் சிவக்குமார், ஆய்வாளர் சரவணன், காவல் உதவி ஆய்வாளர் பாண்டியராஜன் உட்பட 6 காவலர்களை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்

இந்நிலையில் உதவி ஆணைய சிவகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார் இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணை வந்தது விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும், விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்

You may also like...