10, 12 பொது தேர்வு case
10, 12 பொது தேர்வு தள்ளிவைக்க கோரிய வழக்குகள் நாளை விசாரணை
மாணவர்களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளதால், 10ம் வகுப்பு தேர்வுகளை தள்ளி வைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல்
இளங்கீரன், ஸ்டாலின் ராஜா ஆகியோர் தொடர்ந்த வழக்குகள்
நீதிபதிகள் சத்யநாராயணன் மற்றும் புஷ்பா சத்யநாராயணா அமர்வில் விசாரணை
200 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு படிக்க வரும் பெரும்பாலான மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி ஏற்படுத்த எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலை நீடிக்கிறது – மனு
தேர்வின் போது மாணவர்கள் சமூக இடைவெளியை பின்பற்றுவார்களா என்பது கேள்விக் குறி. எந்த முன்னெச்சரிக்கை ஏற்பாட்டையும் செய்யாமல் தேர்வை அறிவித்திருப்பது மாணவர்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்பை ஏற்படுத்திவிடும் – மனு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இல்லை என்ற நிலை வரும் வரை 10ம் வகுப்பு தேர்வை நடத்த கூடாது – மனு