முன்னாள் சபாநாயகர் காளிமுத்து அவர்களின் சகோதரர் *விஜய நல்லதம்பி* என்பவரை ஏன் இன்னும் போலீசார் கைது செய்யவில்லை என்று நீதிபதி சரமாரி கேள்வி.

முன்னாள் சபாநாயகர் காளிமுத்து அவர்களின் சகோதரர் *விஜய நல்லதம்பி* என்பவரை ஏன் இன்னும் போலீசார் கைது செய்யவில்லை என்று நீதிபதி சரமாரி கேள்வி.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ரவீந்திரன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதில் முதல் குற்றவாளியாக முன்னாள் சபாநாயகர் காளிமுத்து அவர்களின் சகோதரர் திரு விஜய நல்லதம்பி என்பவர் சேர்க்கப்பட்டிருந்தார். இதே வழக்கில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் திரு கே.டி .ராஜேந்திர பாலாஜி அவர்களும் இரண்டாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இதில் முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி ராஜேந்திர பாலாஜி உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் நிலுவையில் இருக்கும் போது அவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன்பின்பு உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி அவர் தற்போது இடைக்கால ஜாமீன் பெற்று ஜாமீனில் வெளியில் வந்தார். ஆனால் இந்த வழக்கில் முதல் குற்றவாளியான திரு நல்லதம்பி என்பவருக்கு ஆரம்பம் முதலே போலீசார் பல சலுகைகள் காட்டி வந்ததாகவும் இதுவரை அவரை போலீசார் பிடித்து விசாரணை செய்யாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இந்தப் பிரச்சனையில் முதல் குற்றவாளிக்கு இவ்வளவு கரிசனம் கொடுத்து மாவட்ட காவல்துறை மிகவும் பாதுகாப்புடன் அவரை நடத்தி வருவதாகவும் இரண்டாவது குற்றவாளி முன்னாள் அமைச்சர் போலீஸாரால் பிடிக்கப்பட்டு ஜாமினில் வெளியில் வந்துள்ளார். ஆனால் இந்த விஜய நல்ல தம்பி இவரைப்போல பல பேர்களிடம் பணத்தை வாங்கி மோசடி செய்து விட்டு இந்த வழக்கில் இவர் தாக்கல் செய்த பிணை மனு சென்னை உயர்நீதிமன்றத்திலும் தள்ளுபடி செய்யப்பட்டு அதன் தொடர்ச்சியாக உச்ச நீதிமன்றமும் தற்போது தள்ளுபடி செய்துள்ள சூழ்நிலையில் போலீசார் அவரை கைது செய்யாமல் பாதுகாப்பு அளித்து வருகின்றனர் என்றும் அவரை உடனடியாக போலீசார் பிடித்து சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று இந்த வழக்கின் மனுதாரர் ரவீந்திரன் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதியரசர் திரு ஜெகதீஸ் சந்திரா அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்திருந்த சூழ்நிலையில் நீதிபதி அவர்கள் இதே வழக்கில் இரண்டாவது குற்றவாளியான முன்னாள் அமைச்சரை பிடித்து விட்ட போலீசார் ஏன் இன்னும் முதல் குற்றவாளியான விஜய் நல்ல தம்பியை பிடிக்கவில்லை என்று சரமாரியாக கேள்வி எழுப்பினார். அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கினை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
இதனால் விஜய நல்லதம்பி விரைவில் கைது செய்ய‌படலாம் என்று கூறப்படுகிறது.

You may also like...