புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பதவிகளை நவம்பர்  இறுதிக்குள் நிரப்ப  பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் பதவிகளை நவம்பர்  இறுதிக்குள் நிரப்ப
பல்கலைக்கழகத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது….

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 2015ஆம் ஆண்டு முதல் பதிவாளர் மற்றும் தேர்வு க கட்டுப்பாட்டாளர் பதவிகள் காலியாக உள்ளதாகவும் தற்காலிகமாக நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்த பதவிகளை நிரப்ப உத்தரவிட வேண்டும் என  புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர்கள் அல்ல ஊழியர்கள் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் காலி பதவிகள் எப்போது நிரப்படும் என்பது குறித்து பதில் அளிக்க பல்கலைகழகத்திற்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதி கேசவலு அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தது.

அப்போது,  தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவிக்கு 23 பேரும், பதிவாளர் பதவிக்கு 36 பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், நேர்முக தேர்வு நடத்தி நியமனம் செய்ய 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என பல்கலைக்கழகம் சார்பில் கோரப்பட்டப்பட்டது.

இதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,இரு பதவிகளிலும் முக்கியமான பதவிகள் என்பதால் நவம்பர் இறுதிக்குள்  நிரப்ப வேண்டும்  என உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் மாதத்திற்கு தள்ளிவைத்தனர்…

You may also like...