நீதிபதிகள் கிருபாகரன் & ஹேமலதா அமர்வில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது

[4/9, 17:13] Milton: கொரோனா நோய்த்தொற்றை தேசிய்ப்பேரிடராக அறிவித்து, சிறப்பு செயல்பாட்டுக்குழு அமைத்து தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவும், தனியார் மருத்துவமனைகள் கட்டணக்கோள்ளைக்கு வழிவகுக்கும் அரசாணையை ரத்து செய்யவும்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் சென்னைகிளை செயலாளர் வழக்கறிஞர் திரு.ஜிம்ராஜ் மில்ட்டன், சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 பொதுநல வழக்கு தாக்கல்:

1.கொரோனா நோய்தொற்றை தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் செயல்பாட்டுக்குழு அமைத்து தேசிய நோய்த்தடுப்பு மையம் வழிகாட்டுதலின்படி பருண்மையாக செயல்திட்டம் வகுத்து கொரோனா நோய்த்தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்,

2.கொரோனா தோற்றுநோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி சிகிச்சை பார்க்கவேண்டும் என்ற அரசாணையை ரத்துசெய்து இலவச சிகிச்சை வழங்கவும் இரண்டு பொதுநல வழக்குகள் (W.P.7414 of 2020, W.P.7456 of 2020) தாக்கல் செய்தார்.

மேற்கண்ட 2 வழக்குகள் இன்று மான்புமிகு நீதிபதிகள் கிருபாகரன் & ஹேமலதா அமர்வில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் திரு.அரவிந்த் பாண்டியன் அவர்கள் பல்வேறு விஷயங்களை வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவின் மீது அரசு நடவடிக்கை எடுத்துவருவதாகவும் குறிப்பான விவரங்கள் இருந்தால் தெரிவிக்கும்படியும் தெரிவித்தார்.
• மனுதாரர் தரப்பில் மருத்துவர்கள், செவிலியர்கள் & தூய்மை பணியாளர்கள் உரிய PPE உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும், வடசென்னை & பின்தங்கிய கிராமங்களில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு பொது சமையற்கூடம் அமைத்து உணவு வழங்கவும் சாலையோரங்களில் வசிக்கின்ற மக்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவுக்கு உத்திரவாதம் அளிக்கவும், 2 லட்ச வெளிமாநில தொழிலாளர்கள் பிரச்சனைபற்றி முன்வைக்கப்பட்டது. மேலும் தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வட்டார அளவில் செயல்பாட்டு குழுக்கள் அமைத்து நிவாரணப்பணிகளை செய்யவும் இவற்றில் ஏற்கனவே அரசிடம் பதிவு செய்துள்ள 1100, மருத்துவர்கள், 3500 மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 45,000 தன்னார்வலர்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது.
• மேற்படி கோரிக்கைகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பது பற்றி அரசுக்கு உத்திரவிடப்பட்டு, இதுபற்றிய அரசின் கருத்தினை தெரிவிக்க வழக்கு இருவாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
[4/9, 17:15] Sekarreporter 1: 🌹🙏🏼

You may also like...