நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சட்டத்துக்குப் புறம்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய வார்டு மறுவரையறை மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் சம்பந்தமாக தேர்தல் ஆணையத்தில் அஇஅதிமுக சார்பில் மனு:-

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு சட்டத்துக்குப் புறம்பாக நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய வார்டு மறுவரையறை மற்றும் வாக்காளர் பட்டியல் திருத்தம் சம்பந்தமாக தேர்தல் ஆணையத்தில் அஇஅதிமுக சார்பில் மனு:-

இன்னும் ஓரிரு மாதங்களுக்குள்ளாக நகர்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது இந்த தேர்தலை ஒட்டி தமிழக தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில் அனைத்து கட்சி கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது அதில் அஇஅதிமுக சார்பில் கழக மாவட்டச் செயலாளர்களும், தேர்தல் பொறுப்பாளர்களும் கலந்துகொண்டு தங்களுடைய மேலான கருத்துக்களையும் ஆட்சேபனைகளையும் தெரிவித்தனர் அதை அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களும் பதிவு செய்து கொண்டனர் ஆனால், எங்களின் ஆட்சேபனைகளின் மீது இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்படவில்லை.

மாறாக தேர்தல் ஆணையம் வாய்மொழி உத்தரவாக வார்டு மறுவரையறை, வாக்காளர் பட்டியல் திருத்தமும் செய்வதற்குண்டான உத்தரவை பிறப்பித்து இருப்பதாக அறிகிறோம் இந்த வார்டு மறுவரையறை ஆனது எந்தவிதமான செயல்முறை உத்தரவு அல்லது அரசு உத்தரவு இன்றி வாய்மொழி உத்தரவாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நாங்கள் அறிகிறோம். குறிப்பாக அவர்களுக்கு பாதகமான வார்டில் இருந்து சாதகமான வார்டில் இருக்கும் சில குறிப்பிட்ட வாக்காளர்களை திமுகவிற்கு ஆதரவான செயல்பாடாகவும், அந்தந்த பகுதியிலுள்ள திமுக நிர்வாகிகளுக்கு சாதகமாகவும் வார்டு மறுவரையறை, வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கடந்த அஇஅதிமுக ஆட்சியில் 2016 முதல் 2018 வரை முறையான அரசு அறிவிப்பு அறிவித்து சட்டத்திற்கு உட்பட்டு பொதுமக்களிடம் கருத்து கேட்டு வார்டு மறுவரையறை செய்து முடிக்கப் பட்டிருக்கிறது இவ்வாறு இருக்கும் போது தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய திமுகவிற்கு சாதகமான வார்டு மறுவரையறை, வாக்காளர் பெயர் நீக்கம், சேர்த்தல் முழுவதுமான சட்டத்திற்கு முரணானது. காரணம் வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் அந்தந்த உரிய வாக்காளர்களின் அனுமதியின்றி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக நாங்கள் அறிகிறோம்.

எனவே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய வார்டு மறுவரையறை, வாக்காளர் பட்டியல் திருத்தம் எந்தவிதமான வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் இருப்பதாக நாங்கள் அறிகிறோம் இது முழுவதுமான ஜனநாயக விரோதப் போக்காக நாங்கள் பார்க்கிறோம்.

குறிப்பாக கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேரூராட்சிக்குட்பட்ட வார்டுகளில் வாக்காளர்களின் அனுமதியின்றி அவர்களுக்கு தெரியாமல் ஒரு வார்டில் இருந்து மற்றொரு வார்டிற்கு குறைந்தபட்சம் 30 லிருந்து 80 வாக்காளர்கள் மாற்றப் பட்டிருக்கிறார்கள் இது எந்தவிதமான செயல்முறை உத்தரவு, அரசு அறிவிப்பு, தேர்தல் ஆணையத்தின் வெளிப்படைத் தன்மையும் இல்லாத ஒரு செயலாக நாங்கள் பார்க்கிறோம் இந்த சட்டத்திற்கு புறம்பான வாக்காளர் பட்டியல் திருத்தம் திமுகவின் வெட்கப்படக்கூடிய செயல்களில் ஒன்று. வார்டு மறுவரையறை வாக்காளர் பட்டியல் திருத்தம் தேர்தல் ஆணையத்தின் சட்டதிட்ட விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் இதற்கு உதாரணமாக பல உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் இருக்கிறது இந்த தீர்ப்புகளை பின்பற்றி நடந்து கொள்வதும், நடந்து கொள்ள வைப்பதும் தமிழக தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு இந்தப் பொறுப்புக்கு தேர்தல் ஆணையர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் மேலும், வார்டு மறுவரையறை முடிந்தபிறகு அதை மீண்டும் செய்வதும் வாக்காளர் பட்டியல் வாக்காளர்கள் முன் அனுமதி இன்றி நடைபெறுவதும் தேவையற்ற ஒன்று இது எதைக் காட்டுகிறது என்றால் தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மையான ஆதரவு திமுகவிற்கு இருக்காது என்பதை உணர்ந்த திமுக அரசு தமிழக தேர்தல் ஆணையத்தை தன்னுடைய கைப்பாவையாக மாற்றி தேர்தலில் தங்களின் தொடர் தில்லுமுல்லுகளை எதிர்வரும் தேர்தலிலும் நடைமுறைப்படுத்தலாம் என திமுக எண்ணி இருப்பதாக நாங்கள் அறிகிறோம்.

அதேபோல நடந்து முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் பல புகார்களை தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்திருந்தோம் அதன்மீது எந்தவிதமான நடவடிக்கையும் தேர்தல் ஆணையத்தால் எடுக்கப்படவில்லை இது தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை என்பதை காட்டிலும் ஆளுங்கட்சியை தவிர்த்து மற்றவர்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்துகிறது என்பதை காட்டுகிறது. எனவே இந்த புகாரின் மீது உடனடியாக தேர்தல் ஆணையம் தலையிட்டு நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய வார்டு மறுவரையறை யையும், வாக்காளர்களின் முன் அனுமதியின்றி நடைபெற்றுக் கொண்டிருக்க கூடிய வாக்காளர்பட்டியல் திருத்தத்தையும் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தை நாடுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை.

என்ற புகாரை தேர்தல் ஆணையரிடம் வழங்கியிருக்கிறோம் உரிய நடவடிக்கை எடுப்பதாக சொல்லி இருக்கிறார்.

அன்புடன்,
ஆர். எம். பாபு முருகவேல்,
கழக செய்தி தொடர்பாளர்,
கழக வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர்,
கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர்.

You may also like...