திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Smsj c saravanan j bench order

சென்னையில் உள்ள திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க விரைந்து நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், சென்னையில் உள்ள திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமாக ஆவடி தாலுகா வெள்ளனுரில் 134 ஏக்கர் அசையா சொத்துக்கள் உள்ளன .இந்த சொத்துக்கள் மூலம் கோவிலுக்கு எந்த வருமானமும் வரவில்லை. கோவில் சொத்துக்கள் போலி ஆவணம் மூலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து சொத்துக்களை மீட்குமாறு இந்து சமய அரநிலயதுறைக்கு கடந்த 2019 மே 27ஆம் தேதி அனுப்பிய மனு மீது நடவடிக்கை எடுக்குமாறு அறநிலையத்துறை ஆணையர், அறநிலையத்துறை கூடுதல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.

அதன் அடிப்படையில் கூடுதல் ஆணையர் நடவடிக்கை எடுத்து அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் சம்மந்தப்பட்ட கோவில் சொத்துக்கள் அளவீடு செய்யப்பட்டதாகவும்,கோவில் சொத்துக்களில் பல வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்க பட்டிருந்தாக எனக்கு தகவல் வந்தது. இந்த தகவல் எனக்கு தெரிய வந்தவுடன் உடனடியாக கோவில் மேலாளருக்கு கடந்த 22ஆம் தேதி மனு அளித்தேன்.
ஆனால் இதுவரை கோவில் நிலங்களை மீட்கவோ, பாதுக்காகவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி நிலத்தை மீட்குமாறு அறநிலையத்துறைக்கும், தமிழக அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி. சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்பட்டதா என கேள்வி எழுப்பினர்.

அதற்கு விளக்கமளித்த அறநிலையத் துறை வழக்கறிஞர் ஏற்கனவே கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் சர்வே செய்யப்பட்டுள்ளது ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாகவும் தெரிவித்தார்.

கோவில் நிர்வாகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவிலுக்கு சொந்தமான 134 ஏக்கர் நிலத்தில் பல்வேறு தரப்பினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் நீர் நிலைகளும் அடங்கும் என்பதால் அவை நில அளவை செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் மனுதாரர் தெரிவித்துள்ள கோவிலுக்கு சொந்தமான சுமார் 134 ஏக்கர் நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை உடனடியாக எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

You may also like...