திருமணமாகி 10 ஆண்டுகள் பிரிந்திருக்கும் தம்பதிக்கு விவாகரத்து வழங்க மறுத்த குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

திருமணமாகி 10 ஆண்டுகள் பிரிந்திருக்கும் தம்பதிக்கு விவாகரத்து வழங்க மறுத்த குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

1997ஆம் ஆண்டு மணமுடித்து சென்னையை சேர்ந்த தம்பதியருக்கு 9 ஆண்டுகளாக குழந்தையில்லாத நிலையில், ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்த்தனர். பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து கோரி 2014ல் சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் கணவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து கணவர் உயர் நீதிமன்றதில் மேல் முறையீடு செய்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கணவர் தரப்பில் தான் தொடர்ந்த விவாகரத்து வழக்கை எதிர்த்தோ அல்லது கணவருடன் சேர்த்து வைக்கக் கோரியோ மனைவி மனுத்தாக்கல் செய்யவில்லை என்றும், மனைவி தனியாக சந்தோசமாக வாழ்ந்து வந்துள்ளார் என்றும், 10 ஆண்டுகள் பிரிந்த நிலையில் திருமண உறவு பாதிக்கப்பட்டுள்ளதாக கருதி விவாகரத்து வழங்கலாம் என வாதிடப்பட்டது.

மனைவி தரப்பில்14 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்ததாகவும், குழந்தை பாக்கியத்திற்காக பல மருத்துவ சோதனைகளை மேற்கொண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டபோதும் நியாயமான செலவைக்கூட சமாளிக்க முடியாமல் திண்டாடியதாகவும், கணவருடன் சேர்ந்து தெரிவிக்கப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கணவன் மனைவி இருவரும் சந்தோசமாக வாழக்கூடிய 10 ஆண்டுகளை தவறவிட்டு, இருவரும் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர். அதன் அடிப்படையிலும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படியும், விவாகரத்து வழங்க மறுத்த சென்னை குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

You may also like...