திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில்  அனுமதியின்றி செயல்பட்ட 26 இறைச்சி கடைகளை அகற்றி விட்டதாக திருப்பூர் மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

திருப்பூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில்  அனுமதியின்றி செயல்பட்ட 26 இறைச்சி கடைகளை அகற்றி விட்டதாக திருப்பூர் மாநகராட்சி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 368 இறைச்சி கடைகளில் 26 கடைகள் எந்த அனுமதியுமின்றி, ஊரடங்கு காலத்திலும் இயங்கி வருவதாகவும், அந்த கடைகளை மூட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனக் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்து முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு  தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் ஆதிகேசவலு அமர்வில் விசாரனைக்கு வந்தது.

இந்த வழக்கில் திருப்பூர் மாநகராட்சி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது அதில் மாநகராட்சிக்குட்பட்ட சுமார் 368 இறைச்சி கடைகள் செயல்பட்டு வருவதாகும் இதில் 26 கடைகள் அனுமதி செயல்பட்டு வருவதை கண்டறியபட்டு அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பிய பிறகு அனுமதியின்றி செயல்பட்ட 26 கடைகளை அகற்றி விட்டதாகவும்

மேலும் அனுமதியின்றி செயல்பட்டுவந்த பழம் மற்றும் காய்கறி கடைகளில் அகற்றிவிட்டதாகவும் திருப்பூர் மாநகராட்சி சார்பில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது அதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்

You may also like...