சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் ஆதினத்தின் சார்பாக வழக்கறிஞர் திரு. வள்ளியப்பன் இவ்ழக்கில் ஆஜராகி அறநிலையத்துறையின் பணிநியமன விதிகளில் விதி.3, 7 மற்றும் 9 ஆகிய விதிகளானது ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்பிற்கு விரோதமாக இருப்பதால், இந்த விதிகள் ஆகம முறைப்படி செய்யப்படும் கோயில் அர்ச்சகர்களுக்கு பொருந்தாது எனவும்,

கோவில் அர்ச்சகர்கள் நியமனம் தொடர்பான அரசு அறிவித்த புதிய விதிகளை எதிர்த்த வழக்குகளில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (22ம் தேதி) தீர்ப்பு அளித்துள்ளது. .

தமிழகத்தில் உள்ள கோவில்களில் அர்ச்சகர்கள், பூசாரிகள் நியமனம் மற்றும் பணி நிபந்தனை தொடர்பாக இந்து சமய அறநிலைய துறை பணி  புதிய விதிகள் 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்டன.

அதில், விதி 7 ஆனது 18 வயதிலிருந்து 35 வயது உடையவர்கள் மட்டுமே அர்ச்சகராக நியமிக்கலாம் என்றும் ஆகம பள்ளிகளில் ஒராண்டு பயிற்சி முடித்தவராக இருக்க வேண்டும் எனறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விதி 9 ஆனது எவ்வாறு அவர்கள் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்றும், அவர்கள் எடுக்கவேண்டிய தேர்வு மற்றும் மதிப்பெண் போன்றவற்றினை குறிப்பிடுகிறது.

இந்த விதிகளை எதிர்த்து, அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் உள்ளிட்ட அமைப்புகளும், தனி நபர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.

சிவாச்சாரியார்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் ஆதினத்தின் சார்பாக வழக்கறிஞர் திரு. வள்ளியப்பன் இவ்ழக்கில் ஆஜராகி அறநிலையத்துறையின் பணிநியமன விதிகளில் விதி.3, 7 மற்றும் 9 ஆகிய விதிகளானது ஏற்கனவே உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்பிற்கு விரோதமாக இருப்பதால், இந்த விதிகள் ஆகம முறைப்படி செய்யப்படும் கோயில் அர்ச்சகர்களுக்கு பொருந்தாது எனவும், இதனை இரத்து செய்ய கோரியும் வாதிட்டார். மேலும் அரசு நடத்தும் அர்ச்சகர் அரசு பள்ளியின் சான்றிதழ் ஆனது, ஆகம முறைப்படி பூஜை நடக்கும் கோயிலுக்கு பூஜை செய்ய தகுதி கொடுக்காது எனவும் வாதிட்டார்.

அர்ச்சகர்கள் பணி நியமனங்கள் சேஷம்மால் மற்றும் ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் படி / பின்பற்றி செய்யவேண்டும். தவறும் பச்சத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக அர்ச்சகர்களை நியமனம் செய்யபட்டு இருக்குமேயானால்,
பாதிக்கப்பட்ட நபர் எவருக்கும் எவர் வேண்டுமானாலும் வழக்கு தொடுக்க நீதி வழங்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

மேலும் எந்தெந்த கோயிலில் எந்த ஆகமம் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதனை அறிய அமைக்கப்படும் குழு முடிவினை பொறுத்து ஆகம கோயில்களை நிர்ணயிக்க வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி கோயில்களை எவைகள் ஆகம பூஜை முறை கோயில்கள் என்றும், ஆகம பூஜை முறை இல்லாத கோயில்கள் என்றும் பிரித்து கண்டறிய 5 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவில் முன்னால் உயர்நீதிமன்ற நீதியரசர் M.சொக்கலிங்கம், முன்னால் இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த என். கோபாலசுவாமி, தற்போதய இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் மற்றும் அரசால் நியமிக்கப்படும் இருவர் மொத்தம் 5 பேர் இக்குழுவில் இடம் பெறுவர். இக்குழு எவையெல்லாம் ஆகம கோயில்கள் என கண்டறிந்து ஆய்வு அறிக்கை கொடுக்கும்.

இந்து சமய அறநிலைய துறை பணி  புதிய விதிகள் 2020 இல் விதி 7 மற்றும் 9 ஆனது  ஆகம பூஜை முறை செய்யும் கோயிலுக்கு பொருந்தாது என அதிரடி தீர்ப்பு அளித்துள்ளது. இதனால் ஆகம விதிகளுக்கு மாறாக கோயிலில் அர்ச்சகர் பணி நியமனம் செய்வது இந்த தீர்ப்பின் மூலம் செல்லதக்கது அல்ல. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு மற்றும் தற்போதய உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆனது ஆகம பூஜை முறை கோயிலில் அர்ச்சகர் பணி நியமனம் ஆனது ஆகம முறைப்படியே இருக்கவேண்டும் எனவும் இதனை அரசியல் அமைப்பு சட்டமும் அங்கீகரிக்கிறது எனவும் தீர்ப்பில் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு விரோதமாக அர்ச்சகர்களை நியமனம் செய்யபட்டு இருக்குமேயானால்,
பாதிக்கப்பட்ட நபர் எவருக்கும் எவர் வேண்டுமானாலும் வழக்கு தொடுத்து நீதி பெற்று கொள்ளலாம் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

.

You may also like...