சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா நிறுவன ஊழியர்கள் ஆனந்த் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மீது அமலாக்க துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்கள் நான்கு பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தபட்டனர். இவர்களை வருகிற 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வங்கிகளில் நான்காயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாக சுரானா நிறுவனத்தின் நான்கு பேரை அமலாக்கத்துறை இன்று கைது செய்துள்ளது.

இவர்களை வருகிற 27ம் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை தலைமையிடமாக கொண்டு தங்கம் இறக்குமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வந்த சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம், சுரானா பவர் லிமிடெட் மற்றும் சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியவை வங்கிகளிடமிருந்து 4 ஆயிரம் கோடி ரூபாய் பணத்தை கடனாக பெற்று முறைகேடுகள் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு இருந்தது.

சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் நிறுவனம் ஐடிபிஐ வங்கியில் 1301.76 கோடி ரூபாய் கடனும், சுரானா பவர் லிமிடெட் சார்பில் 1495.76 கோடி ரூபாய் கடனும், சுரானா கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் 1188.56 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடி செய்ததாகவும் இந்த கடன் தொகையை திருப்பி செலுத்தவில்லை என கூறி அந்த நிறுவனங்களுக்கு எதிராக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றது.

இந்த கடன் தொகையை சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் தினேஷ் சந்த் சுரானா, விஜயராஜ் சுரானா நிறுவன ஊழியர்கள் ஆனந்த் மற்றும் பிரபாகரன் ஆகியோர் மீது அமலாக்க துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இவர்கள் நான்கு பேரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பு ஆஜர்படுத்தபட்டனர். இவர்களை வருகிற 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...