சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை* *சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் இன்று வரை உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் ஆணையத்தில் வாக்குமூலம்*

*சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை*

*சசிகலா மீது தனிப்பட்ட முறையில்
மரியாதையும் அபிமானமும் இன்று
வரை உள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம்
ஆணையத்தில் வாக்குமூலம்*

*ராஜா செந்தூர்பாண்டியன்* சசிகலா மீதுள்ள குற்றாச்சாட்டை களைய வேண்டும் என்பதற்காக நான் ஆணையம் அமைக்கவேண்டும் என்று தனியார் தொலைக்காட்சிக்கு அழைத்த பேட்டி சரிதானா.?

*ஓ.பிஎஸ்* சரிதான்

*ராஜா செந்தூர் பாண்டியன்* – நான்கரை மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் பங்கேற்று வாக்குமூலம் அளித்துள்ள நிலையில் ஜெயலலிதா மரணத்தில் உங்களுக்கு ஏதும் தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளதா ? –

*ஓ.பி.எஸ்* ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை என்றும், பொதுமக்களின் கருத்து வலுத்ததால் தான், நான் இந்த கோரிக்கையை விடுத்தேன். அவரின் மரணத்தில் உள்ள சந்தேகங்களை ஆணையம் களைய வேண்டும் என்றார்.

*ராஜா செந்தூர் பாண்டியன்* மரணம் குறித்து நீதி விசாரணை கேட்டதும், நீங்கள் தான், அரசாணை பிறப்பித்ததும் நீங்கள் தான் என்றும், இப்போது விசாரணைக்கும் வந்துள்ளீர்கள் ?

*ஓ.பி.எஸ்* ஆணையம் பணித்ததால் வந்தேன் என்றார்.

*ராஜா செந்தூர் பாண்டியன்* ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 22-09-2016 முதல் 05-12-2016 வரையிலான காலத்தில் அப்போலோ மருத்துவமனையில் என்னென்ன சிகிச்சை கொடுக்கப்பட்டது தொடர்பாக விசாரிக்க தான் ஆணையம் அமைக்கப்பட்டது சரிதானா?

*ஓ.பி.எஸ்* சரிதான்.

*ராஜாசெந்தூர் பாண்டியன்* சசிகலா மீது இப்போதும் தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் உள்ளதா ?

*ஓ.பி.எஸ்* சசிகலா மீது தனிப்பட்ட முறையில் மரியாதையும் அபிமானமும் இன்று வரை உள்ளது.

*ராஜா செந்த்தூர்பாண்டியன்* விசாரணை அமைக்கப்பட்ட முதல் யாரிடமெல்லாம் என்னென்ன விசாரணைகள் நடைபெற்றது என்பது குறித்து தெரியுமா ?

*ஓ.பி.எஸ்* நான் பதில் சொன்னது அனைத்தும் பத்திரிகைகளில் முழுவதுமாக வந்துள்ளது. இதற்கு முன்பு, நடந்த விசாரணையில் முழுவதுமாக வரவில்லை.

You may also like...