கைவிடப்பட்ட குவாரிகளில் தடுப்பு வேலிகள் அமைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும், அதன்மூலம் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்பட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

[9/7, 22:52] Jounalist: கைவிடப்பட்ட குவாரிகளில் தடுப்பு வேலிகள் அமைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும், அதன்மூலம் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்கப்பட வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூரை சேர்ந்த ஆர்.கிடியான் பாபு, பி.மோசஸ் ஆகிய பதின்ம வயது சிறுவர்கள், தங்கள் குவாரியில் குளிக்கும்போது ஆழமான பகுதிக்கு சென்றதால் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
பிள்ளைகளின் மரணத்திற்கு இழப்பீடு கோரி இருவரது பெற்றோர்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன்
பிறப்பித்த உத்தரவில், மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை என்றும், உயிர் இழப்பை
பணத்தின் அடிப்படையில் மதிப்பீடு செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மனித உயிர்களின் இறப்பு நிச்சயம் என்றாலும், ஆனால் அது எப்போது நிகழும் என்பது நிச்சயமற்றது என சுட்டிக்காட்டியுள்ளார்.

பிறந்த அனைவரும் நிச்சயமாக இறந்துவிடுவார்கள் என்றாலும், மற்றவர்களின் அலட்சியம் காரணமாக மரணம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

குடும்பத்தில் ஒருவரின் எதிர்பாராத மரணம் குடும்ப உறுப்பினர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்குவதுடன், ஒரு வெற்றிடத்தையும் விட்டுச்செல்வதாக வேதனை தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் இழப்பீட்டுத் தொகையைக் கொண்டு இழந்த உயிர்களை மீட்டெடுக்க முடியாது என்றாலும், அது நிச்சயமாக வலிமிகுந்த இதயங்களுக்கு ஒரு மருந்தாக இருக்கும் என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

‘ஹைடெக் ராக் அக்ரேகேட்ஸ் ப்ராடக்ட்ஸ்’
என்ற நிறுவனத்திற்கு இந்த இடம் முன்பு குத்தகைக்கு வழங்கப்பட்டு, அதில் பல அடிகள் ஆழத்திற்கு தோண்டி எடுக்கப்பட்ட நிலையில், குத்தகை காலம் முடிந்த பிறகு, அந்த நிறுவனமோ, அரசு நிர்வாகமோ வேலியை அமைக்காததால் இரு சின்னஞ்சிறு உயிர்கள் பலியாகி உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கைவிடப்பட்ட குவாரியை சுற்றி வேலி அமைப்பதற்கோ அல்லது எச்சரிக்கை பலகை அமைப்பதற்கோ எந்தவித நடவடிக்கையும்
எடுக்கவில்லை என்றும்,
எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க குறைந்தபட்ச பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்காததற்காக அப்பகுதி கிராமவாசிகள் கூட கேள்வி கேட்கவில்லை என்பதையும் தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு அடையாள பலகையோ, தடை செய்யப்பட்ட பகுதி என்பதற்கான அறிவிப்பு பலகையோ வைக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

குவாரி நிறுவனத்திடமிருந்து மாவட்ட நிர்வாகம் பெற்றுள்ள 25 லட்சத்து 31 ஆயிரத்து 250 ரூபாய் முன்வைப்பு தொகையை மகன்களை இழந்துள்ள குடும்பங்களுக்கு வட்டியுடன் வழங்க வேண்டும் என நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டுள்ளார்.

குத்தகை காலம் முடிந்த பிறகு குத்தகைதாரர்கள் சம்பந்தப்பட்ட நிலம், தளத்தை வேலி அமைத்து வழங்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள்
மற்றும் மாநிலத்தில் உள்ள பிற அதிகாரிகளுக்குத் தேவையான உத்தரவுகள், அறிவுறுத்தல்களை தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வழங்க வேண்டும் என்றும்,
எதிர்காலத்தில் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் இருக்கத் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
[9/7, 22:56i Jounalist: 16 வயது மாணவியை நீட் தேர்வு எழுத அனுமதித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

நீட் தேர்வெழுத குறைந்த பட்ச வயது வரம்பு 17 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 16 வயதான மாணவி ஒருவர் தன்னை சிபிஎஸ்யி சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வெழுத அனுமதித்து விட்டதாகவும்,
தன்னை நீட் தேர்வெழுதவும் அனுமதிக்க வேண்டுமெனவும் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மாணவியை நீட் தேர்வெழுத அனுமதி அளித்து உத்தரவிட்டிருந்தார்

இதனை எதிர்த்து தேசிய தேர்வு முகமை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வில் நடைபெற்று வந்தது

விசாரணையின் போது தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நீட் தேர்வெழுத டிசம்பர் 31 2020ன் படி 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டுமென்று விதியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதனை தனி நீதிபதி கணக்கில் கொள்ள மறுத்துவிட்டதாகவும், இதுபோன்ற கொள்கை சார்ந்த விஷயங்களில் நீதிமன்றம் தலையிடுவதை தவிர்க்க வேண்டும் என்று வாதிட்டார்

தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஒரு மாணவரின் அறிவுத் திறனுக்கும் பக்குவத்திற்கும் வேறுபாடு உள்ளதாகவும், மருத்துவ படிப்பிற்கு உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் முதிர்ச்சி தேவை எனவும்,
ஒருவரின் அறிவுத்திறனை வைத்து முதிர்ச்சியை கணக்கிட முடியாதெனவும் வாதிட்டார்

மாணவி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,
நீட் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை
எதிர்க்க வில்லை எனவும், மாணவியின் அறிவுத்திறனை கணக்கில் கொண்டு
விதிவிலக்கு அளிக்க வேண்டும் எனவும், ஏற்கனவே சிபிஎஸ்சி பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது வயது வரம்பின் காரணமாக நீட் தேர்வெழுத ஓராண்டு காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் எடுத்துரைத்தார்

குறைந்தபட்சம் நீட் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் எனவும் பின்னர் சம்பந்தப்பட்ட மாணவி மருத்துவ படிப்பில் சேர்க்கலாமா, வேண்டாமா என்பதை பின்னர் முடிவு செய்து கொள்ளலாம் எனவும் அவர் வாதிட்டார்

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில்,இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், ஒருவருக்கு நல்ல அரசியல் புரிதல் இருக்கிறது என்பதற்காக 18 வயது பூர்த்தி அடையாமல் அவரை வாக்களிக்க அனுமதிக்க முடியுமா எனகேள்வி எழுப்பியதோடு, தற்போது சம்பந்தப்பட்ட மாணவி நீட் தேர்வில் தோல்வி அடைந்தாலும் அதன் தாக்கம் அவரை மன ரீதியாகப் பாதிக்கும் என தெரிவித்து,
நீட் தேர்வெழுத அனுமதிக்க கோரி 16 வயது மாணவி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்

You may also like...