ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல் மாணவர் அணி மாவட்ட செயலாளர் தென் சென்னை வடக்கு மாவட்டம் by Sekar Reporter · February 16, 2020 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி, தமிழக முதல்வராக பதவி ஏற்ற திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் , இன்று முதல்வராக நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். மறைந்த முதலவர் #இதயதெய்வம் #புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் அமைதி, வளம், வளர்ச்சி, என்னும் தாரக மந்திரத்துடன் சிறப்பான ஆட்சியை நடத்தி வரும் நமது முதல்வர் Dr.எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அம்மாவின் ஆட்சியில்.. ‘முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம்’ மூலம் 930 கோடியே 25 லட்சம் ரூபாயில் 4 ஆயிரத்து 965 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் 22 ஆயிரத்து 96 கோடியில் 21 ஆயிரத்து 109 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் சாதாரண மக்களும் பயணம் மேற்கொள்ளும் வகையில் 4 ஆயிரத்து 921 புதிய சொகுசு பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கல்வி குறித்த அனைத்து தகவல்களையும் மாணவர்கள் அறிந்து பயன்பெற ஏதுவாக கல்வித் தொலைக்காட்சியை முதலமைச்சர் தலைமையிலான அரசு துவக்கியுள்ளது. குறுகியகால திறன் பயிற்சி மூலம் 3 லட்சத்து 58 ஆயிரத்து 654 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு 1 லட்சத்து 34 ஆயிரத்து 992 இளைஞர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் உள்ள காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் தலைமையிலான அரசு, குடிநீர் தேவைக்காக ஆயிரத்து 259 கோடியே 38 லட்சம் ரூபாயில் 150 மில்லியன் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தையும் அமைத்துள்ளது. 2 ஆயிரத்து 638 கோடியே 24 லட்சம் ரூபாயில் புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, கோவை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் 9 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் துவக்கப்பட்டுள்ளன. 22 ஆயிரத்து 31 கோடியே 69 லட்சத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடனாக வழங்கப்பட்டு 34 லட்சத்து 7 ஆயிரத்து 954 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். முதலமைச்சரின் சிறப்பு குறைத்தீர்க்கும் திட்டத்தின் மூலம் 4 லட்சத்து 80 ஆயிரத்து 876 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு 2 ஆயிரத்து183 கோடியே 55 லட்சம் ரூபாயில் 17 லட்சத்து 72 ஆயிரம் விலையில்லா மடிக்கணிணிகள் வழங்கப்பட்டுள்ளன. 2 ஆயிரத்து117 கோடியே 55 லட்சத்தில் 9 ஆயிரத்து 535 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. அதில் மாற்றுத்திறனாளிகளுக்கு 31% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும்,199 கோடியே 33 லட்சத்தில் 32 ஆயிரத்து 605 பேருக்கு விலையில்லா கறவைப் பசுக்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலைத்துறையில் ரூ.22,096 கோடியில் 21,109 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளது கடந்த 3 ஆண்டுகளில் சாதாரண மக்களும் பயணம் மேற்கொள்ளும் வகையில் 4,921 புதிய சொகுசு பேருந்துகள் அறிமுகம் கல்வி குறித்த அனைத்து தகவல்களையும் தெரிந்து கொண்டு மாணவர்கள் பயன்பெற ஏதுவாக கல்வித் தொலைக்காட்சி துவக்கம் குறுகியகால திறன் பயிற்சி மூலம் 3,58,654 இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு 1,34,992 இளைஞர்கள் பணியில் உள்ளனர் காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பு ரூ.1,259.38 கோடியில் 150 மில்லியன் திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையம்… இப்படி எண்ணற்ற வளர்ச்சி திட்டங்களை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்… தகவல் பணியில்…ஆர்.ஏ.எஸ்.செந்தில்வேல் மாணவர் அணி மாவட்ட செயலாளர் தென் சென்னை வடக்கு மாவட்டம்
petitioner has a tiled roof house and naturally falling of coconuts would break the tiles and thereby causing more damages resulting in loss, I would direct the 4th respondent, Tahsildar, Taluk Office, Kuthalam Taluk, to take immediate steps to cut the coconut tree lying in the premises of the 5th respondent and, also advice the petitioner to plant a guava tree. It would also provide shade and hopefully it will grow without causing obstruction. The Writ Petition stands disposed of. A direction is issued to the 4th respondent/Tahsildar, Kuthalam Taluk to act as directed above February 22, 2023 by Sekar Reporter · Published February 22, 2023
Lawyer moves Supreme Court seeking direction for RBI to extend the moratorium on loan repayment till December 31 @RBI August 23, 2020 by Sekar Reporter · Published August 23, 2020