ஆன்லைன் விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர் பெண்ணிடம் ஆபாசமாக நடந்தகொண்ட சம்பவம் தொடர்பான வழக்கில்,சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி வீடியோவில் இடம் பெற்ற பெண்ணுக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் விசாரணையின்போது வழக்கறிஞர் ஒருவர் பெண்ணிடம் ஆபாசமாக நடந்தகொண்ட சம்பவம் தொடர்பான வழக்கில்,சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி
வீடியோவில் இடம் பெற்ற பெண்ணுக்கு நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

 

கொரோனா ஊரடங்கின்போது, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் ஆன்லைன் மூலமாக விசாரிக்கப்பட்டது.அப்போது வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் என்பவர் ஆன்லைன் மூலம் ஆஜராகி இருந்தார். அப்போது தனக்கு முன்பு இருந்த கேமரா ‘ஆனில்’ இருப்பதை தெரியாமல் உடனிருந்த பெண்ணுடன் ஆபாசமாக நடந்துகொண்டார்.. இதை ஆன்லைனில் ஆஜராகியிருந்த மற்றொருவர் தன் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
சமூக வலைத்தளத்தில் வைரலான இந்த வீடியோவை கண்டு நீதிபதிகள் வழக்கறிஞர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் தலைமையிலான அமர்வு தாமாக முன் வந்து கோர்ட்டு அவமதிப்பு வழக்கை தொடர்ந்தது.
இந்த வீடியோ வெளியானது குறித்து வழக்குப்பதிவு செய்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது
இதன்படி சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணனை கைது செய்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையிலான அமர்வு, வீடியோ காட்சியில் இடம்பெற்றிருந்த பெண்ணுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டுமென்று வழக்கறிஞர் சந்தான கிருஷ்ணனுக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஏ.ஏ. நக்கீரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 4 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

You may also like...